சென்னை, ஆக,24-
தமிழ்நாட்டில் பயன் படுத்தி கார் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு முதல் ஆறு மாதத்தில் விற்பனையான பயன்படுத்திய கார்களை விட இந்தாண்டு முதல் ஆறு மாதத்தில் சந்தையானது 80 விழுக்காடு அதிக வரு வாயை பெற்றுள்ளது என்று சென்னையில் செய்தியாளர் ளிடம் பேசிய கார்ஸ் 24 இன் இணை நிறுவனர் கஜேந்திர ஜாங்கிட் கூறினார்.
தமிழ்நாட்டில் நடப் பாண்டு முதல் ஆறு மாதத்தில் ரூ. 222 கோடி மதிப்புள்ள வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும் ஏப்ரல்-மே-ஜூன் காலாண்டின் பரிவர்த்தனை மதிப்பு ரூ.67 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 20விழுக் காடு அதிகமாகும். பயன் படுத்தப்பட்ட கார் விற்பனை யில் தமிழ்நாடு சந்தை 30விழுக்காடு முதல் 40 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது. பயன்படுத்திய கார்களின் சராசரி விற்பனை விலை ரூ. 5.5-6 லட்சமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
தேசிய அளவில் ஹூண்டாய் ஐ 10, ரெனால்ட் கேவிட் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகிய கார்கள் 50 விழுக்காடு முதல் 55 விழுக் காடு அதிகமாக விற்பனை யாகும் மாடல்கள் என்றும் அவர் தெரிவித்தார்.