districts

img

மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உருவப்படம் திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் தலைமை பொது மேலாளருமான மறைந்த தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் உருவப்படம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட குழு அலுவலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், கே.வாசுதேவன், வி.தமிழரசி உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் குடும்ப பாதுகாப்பு நிதி ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.