districts

img

சாலை வரி உயர்வால் தொழில் முற்றிலும் பாதிக்கும்: லாரி உரிமையாளர் சங்கம்

வேலூர் அக். 13- சாலை வரி பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளதால் தொழில் முற்றிலும் பாதிக்கும் என்று வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வேலூர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் செயலாளர் லோகநாதன் பொருளாளர் சுகுமார் ஆகியோர் காட்பாடியில் செய்தி யாளர்களை சந்தித்தனர். அப்போது கூறியதாவது:- கடந்த 23 ஆண்டு களாக உயர்த்தாத சாலை வரியை 50 விழுக்காடு உயர்த்தப் போவதாக போக்கு வரத்துத்துறை அமைச்சர் லாரி உரிமை யாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் வரி பல மடங்கு உயரும் ஏற்கனவே லாரி தொழில் நலிவடைந்து உள்ளது.  வேலூர் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஓராண்டு காலமாக வட்டார போக்கு வரத்து அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்தவர் கூடுதல் பணியாக கவனிப்பதால் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே வேலூருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உடனடியாக நியமிக்க வேண்டும்.  இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விட்டது. லாரியில் சம்பாதிக்கும் 75 விழுக்காடு சுங்கச்சாவடி கட்டணம், டீசல், வரி, காப்பீடு களுக்கு மட்டுமே செலவாகிறது. 25 விழுக்காட்டில் லாரிக்கு வட்டி கட்ட வேண்டும். இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே வருங்காலங்களில் லாரி தொழில் முற்றிலும் நசுக்கப்படும் அபாயம் உள்ளது எனவே வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.