திருவண்ணாமலை, ஜூலை 5- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கீழ்கொவளைவேடு இந்திரா நகர் பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத் தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த குடும்பத்தினர் சிலருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு சாதி சான்று வழங்கப்பட்டது. மேலும், பலருக்கு சாதிச் சான்று வழங்காமல் வருவாய்த் துறை நிர்வாகம் வஞ்சித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி மகேந்திரனின் மகன் லோகேஷ் தென்னாங் கூர் அரசு கலைக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்திருந் தார். ஆனால், சாதிச் சான்று இல்லை என்று காரணம் கூறி கல்லூரியில் சேர்க்க நிர்வாகம் மறுத்துள்ளது. அந்த மாணவர் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த வர் என்றும் இந்த சான்றை கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள லாம் என வந்தவாசி வட்டாட் சியர் சான்றிதழ் வழங்கி யுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செய லாளர் அப்துல் காதர், நிர்வாகி யாசர் அராபத் மற்றும் மாணவன் லோகே ஷின் பெற்றோர், உறவினர் கள் தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வந்தவாசி போலீசார் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவன் லோகேஷ் கல்லூரியில் சேர்த்தனர்.