districts

மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, ஆக.24-

     மெட்ரோ ரயிலில் கடந்த  7 மாதங்களில் பயணம்  செய்பவர்கள் எண்ணிக்கை 25 விழுக்காடு உயர்ந் துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 2.13 லட்ச மாக இருந்தது. இது ஜூலை  மாதத்தில் 2.66 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜூலை  மாதத்தில், ஒரு நாளைக்கு  சராசரியாக 23,473 பயணிகள் சென்ட்ரல் மெட்ரோவை பயன்படுத்தினர். ஜனவரி முதல் ஜூலை வரை ஒரு நாளைக்கு சராசரியாக 4,114 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறு கையில், மெட்ரோ ரயில்  நிலைய வளாக பகுதிகளில்  பார்க்கிங் இடத்தை விரி வாக்குதல் மற்றும் மினி பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்றவை நிறுத்த வசதிகள் செய்யப் பட்டன. இதனால் மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக் கையை மேம்படுத்த உதவியது. மேலும் மெட்ரோ ஊழியர்கள் நகரத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறு வனங்களுக்குச் சென்று மாணவர்களிடம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதன் கட்டணம் மற்றும் நன்மைகள் குறித்து அவர்க ளிடம் பேசினர். இதன் விளை வாக, ஆயிரம் விளக்கு மெட்ரோவில் இப்போது ஒரு நாளைக்கு சராசரியாக 11,219 பயணிகள் அதிகரித் துள்ளனர். இதில் பெரும் பாலானோர் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என்பது குறிப் பிடத்தக்கது. ஷெனாய் நகர்  மெட்ரோ ரயில் திறக்கப் பட்டதன் காரணமாக பயணி கள் கூட்டம் அதிகரித்துள் ளது என்றனர்.