திருப்போரூர். ஏப், 3 – மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்கும் நெல்லிக் குப்பம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஐஓபி வங்கியில் மாற்றுத்திறனாளி யின் சொத்து பத்திரத்தை வைத்து வழங்கி கடன் தொகையை அடைத்த பிறகும் பத்திரத்தை திரும்ப வழங்காமல் காலதாமதம் செய்து மாற்றுத்திறனா ளியை அலைக்கழிப்பு செய்த வங்கி அதிகாரிகளை கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கணக்கு துவங்க மறுப்பதை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய குழு சார்பில் திங்களன்று (ஏப் 3) நெல்லிக்குப்பம் ஐஓபி வங்கி எதிரில் இந்த போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலை வர் கே.லிங்கன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். வெள்ளி கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயணி, ஒன்றிய செயலாளர் எப்.அருள் ராணி, ஒன்றிய பொருளாளர் பூபதி உள்ளிட்ட பலர் பேசினர். இதனையொட்டி வங்கி அதிகாரிகள் காவல் துறையினர் சங்க தலைவர்க ளுடன் பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டது.