மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி நிதியளிப்பு கூட்டம் குடியாத்தம் நடுப்பேட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகரம் மற்றும் வடக்கு தெற்கு தாலுகா செயலாளர்கள் எஸ்.சிலம்பரசன், சி.சரவணன், வி.குபேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் திருநங்கைகள் அமைப்பின் வேலூர் மாவட்டத் தலைவர் ஏ.நிஷா நாயக், ஏ.ஸ்வேதா, அபர்ணா ஆகியோர் அகில இந்திய மாநாடு வெற்றி பெற வாழத்து தெரிவித்து தங்களது பங்களிப்பாக நிதி வழங்கினர்.