districts

img

வாயில் கருப்பு துணி கட்டி போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 30 - போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி திங்களன்று (டிச.30) மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 110 மாத அகவிலைப்படியை நிலுவை யுடன் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றங் களின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும், 2023 ஏப்ரல் மாதம் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனே வழங்க வேண்டும், 2003ம் ஆண்டு முதல் பணி நியமனம் பெற்ற தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படி வழங்க வேண்டும்,  பணிகாலத்தில் மறைந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யக் கூடாது, 15வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.30-31 தேதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு போராட் டம் நடத்த அறைகூவல் விடுவித்தது. இதன் ஒருபகுதியாக சென்னை பல்லவன் இல்லம் முன்பு கருப்பு உடை அணிந்தும், வாயில் கருப்பு துணி கட்டியும் ஓய்வூதியர் கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட் டத்தில் பேசிய தலைவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 100 நாளில் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்றார். ஆயிரம் நாட்களை கடந்தும் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றவில்லை. எனவே, இந்த போராட்டத்தை நடத்துகிறோம் என்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை கிளைத் தலைவர் டி.குருசாமி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ஏ.வரதராஜன், துணைப் பொதுச் செயலாளர் வீரராகவன், மாநிலச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட் டோர் பேசினர்.