districts

img

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் டிராக்டர் பேரணி

புதுச்சேரி, ஜன.27- விவசாய பொருட்க ளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டம் இயற்றக்கோரி புதுச்சேரி யில் டிராக்டர் பேரணி நடை பெற்றது. ஒன்றிய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளிடம் ஒப்புகொண்டபடி வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி யில் டிராக்டர் பேரணி நடை பெற்றது.  ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில்  தினத்தன்று கடலுர் சாலை தியாகிகள் சிலையில் இருந்து துவங்கிய பேரணிக்கு விவ சாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கீத நாதன்,சங்கர், ராமமூர்த்தி, ரவி,முருகன்செல்வமணிகண்டன்,குலசேகரன்,புருஷோத்தமன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். விவசாயிகளின் டிராக்டர், இருசக்கர மோட்டார் வாகன பேரணியை காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மறைமலை அடிகல்சாலை, இந்திரா  காந்திசிலை, காமராஜர் சாலையை கடந்து சுதேசி பஞ்சாலை எதிரே முடிந்தது. நிறைவு கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் ராமச்சந்திரன் பங்கேற்று பேசினார். இப்பேரணியில் தொழிற்சங்க தலைவர்கள் பிரபுராஜ், சீனிவாசன், சேது செல்வம் உட்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.