ராணிப்பேட்டை,ஜூன் 29 -
ஆற்காடு அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லையென்றால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தை நடத்து வோம் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் எச்ச ரிக்கை செய்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட் டம், ஆற்காடு அடுத்த சக்கர மல்லூர் கிராம பகுதி அருகே செல்லக்கூடிய பாலாற்றில் இரண்டாவது முறையாக மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொது மக்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எல்சி. மணி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்டப் பொரு ளாளர் சி. ராதாகிருஷ்ணன், குமார், விவசாய தொழி லாளர் சங்கம் மாவட்டத் தலைவர் டி. சந்திரன், செயலாளர் பி. ரகுபதி, மதியழகன், ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலை வர் அ. சக்கரவர்த்தி, கட்சி யின் ஆற்காடு தாலுகா செய லாளர் எஸ். செல்வம், கிராம நிர்வாக அலு வலர் (ஓய்வு) ஆர். மோகன் ராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலச் செய லாளர் இரா. சரவணன் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இருந்த அதிமுக அரசு, மணல் குவாரி அமைத்து அனு மதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக 15 அடி ஆழம் வரை மணல் எடுத்தது. தற்போதும் அதே நிலை தொடர்கிறது. திமுக இது ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதோடு, மாவட்ட ஆட்சியரும் ஒப்புதல் அளிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பாலாற்று படுக்கை யோரமாக ஒட்டியுள்ள 12 கிராம விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றி யுள்ள கிராமங்களில் நீர் நிலை மட்டம் பாதிக்கப் பட்டு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாலாற்று அருகில் உள்ள தொழிற் சாலை தோல் கழிவு நீர்கள் ஆற்றில் கலப்பதால் நீரில் உப்பு தன்மை அதிகரித்து தோல் வியாதிகள் பரவும் சூழ்நிலை இங்கு உருவாகியுள்ளது.
இரண்டாவது முறை யாக மணல் குவாரி அமைப்பதை மாவட்ட ஆட்சி யர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் ஆட்சி யர் அலுவலகத்தை முற்று கையிட்டு குடியேறும் போராட்டத்தை நடத்து வோம். இவ்வாறு அவர் பேசினார்.