districts

img

விபத்தில் சிக்கிய திருமழிசை பேரூராட்சி தலைவர் மரணம்

திருவள்ளூர், மே 16- சாலை விபத்தில்  படுகாயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம்,  திருமழிசை பேரூராட்சி தலை வராக  பதவி வகித்து வந்தவர்  திமுகவை சேர்ந்த உ.வடிவேல் (61). இவர் கடந்த  ஞாயிறன்று தனது உறவின மூர்த்தி என்பவரு டன் திருபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதிக்கு காரில் சென்றுள்ளார். மண்ணூர் கூட்டுச்சாலையில் சென்று கொண்டிருந்த போது  எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் டயர் வெடித்து கார் தூக்கி வீசப்பட்டது. இதில் வடிவேலுவுக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. அவரையும் லேசான காயம் அடைந்த அவரது உறவினரையும் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள சவிதா  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால் வடிவேல் பலத்த காயமடைந்ததால் வடிவேலுவை மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் வியாழனன்று (மே16) சிகிச்சை பலனின்றி வடிவேல் உயிரிழந்தார்.

;