districts

img

தனியார் நிறுவன குடிநீர் உரிமையை ரத்து செய்க திண்டிவனம் வட்ட மாநாடு கோரிக்கை

விழுப்புரம்,செப்.22- திண்டிவனம் குடிநீர் ஆதாரத்தை சுரண்டும் தனியார் குடிநீர் நிறுவனத்தின் உரிமையை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை திண்டிவனம் வட்டம் மாநாட்டில் நிறைவேற்றினர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஞாயிறன்று சிபிஎம் வட்டக் குழு மாநாடு நடைபெற்றது, மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மூர்த்தி மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அறிக்கையை வட்ட செயலாளர் இராமதாஸ் சமர்ப்பித்தார். செயற்குழு உறுப்பினர் ஏ.சங்கரன் மாநாட்டை வாழ்த்தி பேசினார். தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ள திண்டிவனம்-திருவண்ணாமலை, திண்டிவனம்-நகரி ரயில் பாதையை நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக பணியை முடிக்க வேண்டும், திண்டிவனத்தில் அமைந்துள்ள சிப்காட்டில் இப்பகுதியைச் சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்,திண்டிவனம் நகரத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சும் எஸ்.எஸ்.எஸ்.தனியார் குடிநீர் கம்பெனி சட்ட விரோத உரிமையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அறிவழகன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் காந்திராஜ்,சத்தீஸ்குமார், பார்த்தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் வட்ட செயலாளராக ஏ.கண்ணதாசன் உள்ளிட்ட 11பேர் கொண்ட வட்டக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.