சென்னை, பிப். 17- தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ‘காலத் தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் சென்னை எழும்பூரில் உள்ள லலித் கலா அகாடமியில் கடந்த 10ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்து குழுமம் என்.ராம், திமுக அமைச் சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, திமுக செய்தி தொடர்பா ளர் டி.கே.எஸ்.இளங்கோ வன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபி சைலேந்திர பாபு, அம்ரேஷ் புஜாரி, முன்னாள் டிஜிபி நடராஜ், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், நடிகர் சிவக்குமார், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைவர் தேரணி ராஜன், மருத்துவர் ஜெ.ராதா கிருஷ்ணன், ஊடகவிய லாளர் குணசேகரன், வி.ஜி.சந்தோஷம், ரஷ்ய நாட்டு மேஜிக் நிபுணர், கொரியன் தூதரக அதிகாரி உள்ளிட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், திரை பிரல பலங்கள், பள்ளி, கல்லூரி, இதழியல் மாணவர்கள், பொதுமக்கள் என ஏராள மானோர் இந்த கண்காட் சியை கண்டு ரசித்தனர். விசுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு சங்க நிர்வாகிகள் எம்.வேதன், பி.சுரேஷ்குமார், எல்.முருக ராஜ், அஸ்வின் பிரசாத், சஞ்சய் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கண்காட்சியின் நிறைவு விழா சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம் தலை மையில் வெள்ளியன்று (பிப். 17) நடைபெற்றது. நிகழ்ச்சி யில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் கோபால், அருண்ராம் (தி டைம்ஸ் ஆப் இந்தியா), கார்த்திகை செல்வன் (ஊடக நெறியாளர்), ரஞ்சிதா குணசேகரன் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்), குமார் (தினமலர்) ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பொதுச்செய லாளர் எல்.சீனிவாசன், பொருளாளர் எஸ்.அரிகர கிருஷ்ணன், நிர்வாகிகள் வி.எம்.சீனிவாசன், ரமேஷ் சங்கர், இதயதுல்லா, அரு ணாச்சலம், கிஷன் ராம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.