சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் கூத்தன் கோயில் ஊராட்சி செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள காத்திருப்போர் கூடம் மற்றும் கான்சாகிப் வாய்க்காலில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணியினை கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் குமராட்சி அதிமுக ஒன்றியச் செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.