தில்லியில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சந்திரன், செயலாளர் கல்யாணசுந்தரம், நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதரன், மாதர் சங்க மாவட்ட பொறுப்பாளர் ஜேம்ஸ் ஆஞ்சல மேரி, வங்கி ஊழியர் சங்கத் தலைவர் ஹரிராவ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.