ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில் கலவை வட்டத்தில் 68.6 மில்லி மீட்டர் மழையின் அளவு பதிவாகியுள்ளது. கலவை அடுத்த மாம்பாக்கம் காலனியில் மணி - மாலா தம்பதிக்கு சொந்தமான சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை சனிக்கிழமையன்று (ஆக. 10) காலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.