பிஎம்டபிள்யூ நிர்வாகத்தின் நிபந்தனையை ஏற்க மறுப்பு தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது
செங்கல்பட்டு, ஆக. 14- தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் பிஎம்டபிள்யூ தொழிலாளர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மகேந்திரா சிட்டியில் செயல்பட்டு வரும் பி.எம்.டபுள்யூ நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், வேலைத்தளத்தில் வேலை நேரத்தை தன்னிச்சையாக நிர்வாகம் தீர்மானிப்பதை கைவிட வேண்டும், பணிச் சுமையை நியாயமற்ற முறையில் திணிப்பதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை தாமதமின்றி பேசி தீர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எம்.டபுள்யூ தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக ஆலை வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செவ்வாயன்று (ஆக.13) தொழிலாளர் நலத்துறை அலு வலர் முன்பு பேச்சுவார்த்தையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலத் துணை பொது செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழி லாளர்கள் உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என ஆலைநிர்வாகம் சட்ட விரோதமாக வலியுறுத்தியதையடுத்து அந்த நிபந்தனையை சிஐடியு நிராகரித்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மீண்டும் வருகின்ற ஆக.20 அன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிதி நிறுவன மோசடி: மேலும் இருவர் கைது
சென்னை,ஆக,14- மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்' என்ற நிதி நிறுவன மோசடி தொடர்பாக திருச்சியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவ நாதன் யாதவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்களான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை புதன்கிழமை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி ரூபாய் குறித்து விசா ரணை போலீசார் மேற்கொண்டு வருகின்ற னர். பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் 144 முத லீட்டாளர்களிடமிருந்து ரூ.24.5 கோடி பெற்று ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுத்துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி, ஆக.14- அரசுத்துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் நிர்வாக பிரச்சனையால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது”என்றார். அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 2.5 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாநில அரசு சார்பில் 2.5 லட்சம் வழங்கப்பட்டு ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டு வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்க ளுக்கு புதுச்சேரியில் இருந்து ஈ-பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். ஓய்வூதியம் உயர்வு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.விடுபட்ட பத்திரிகையாளர்களுக்கு இடம் தேர்வு செய்து விரைவில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களுக்கு பட்டா கேட்டு மனு கொடுக்கும் இயக்கம்
திருவண்ணாமலை, ஆக. 14- திருவண்ணாமலை வட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, வீடு கட்டி வசிக்கும் ஏழ்மையான சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, வீடற்றவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட துணை தலைவர் கே. நவாப் ஜான் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் யாசர் அராபத், செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். எம். வீரபத்திரன் (சிஐடியு), விவசாயிகள் தலைவர் எம். பிரகநாதன் (விவசாயிகள் சங்கம்), ப.செல்வன், எஸ். ராமதாஸ் (தீ.ஒ.முன்னணி), சி.எம். பிரகாஷ் (வாலிபர்), செல்வி(மாதர் சங்கம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அண்ணா சிலை அருகில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலம் புறப்பட்டது.
ஜப்பானியரை திருவண்ணாமலை அடிவாரத்தில் தேடிய உறவினர்கள்!
திருவண்ணாமலை, ஆக.14- திருவண்ணாமலைக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க சடோஷி மினெட்டா என்பவர் சுற்றுலாவாக வந்துள்ளார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த அவர், கடந்த மே 5 ஆம் தேதி தங்கும் விடுதியில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இது குறித்து விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த இரண்டு மாதமாக காவல்துறையினர் விளம்பரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர். 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் சுமார் 962 ஹெக்டேர் மலையடிவார பரப்பில் தியானம் மேற்கொள்ள சென்றுள்ளாரா என்ற அடிப்படையில் போலீசார் குழுக்களாக பிரிந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டிலிருந்து தூதரகத்தின் மூலம் சடோஷி மினெட்டாவின், தங்கை, தம்பி மற்றும் உறவினர்கள் தற்போது ஜப்பான் நாட்டு தூதரகம் உதவியுடன் சடோஷி மினெட்டாவை காவல்துறை யினருடன் தேடி வருகின்றனர்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி 15 வது முறையாக தீர்மானம்
புதுச்சேரி, ஆக.14- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி 15 வது முறையாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 31 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி யது. 2 வாரங்கள் நடைபெற்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான புதன்கிழமை (ஆக. 14) புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி தனிநபர் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக உறுப்பினர்கள் ஏ.எம்.எச் நாஜிம், செந்தில்குமார், நேரு ஆகியோர் கொண்டு வந்தனர். முதலமைச்சர் ரங்க சாமியும் இதே தீர்மானத்தை கொண்டு வந்தால் பேரவையில் நிறை வேற்றப்பட்டது. இதன் மூலம் 15 வது முறையாக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கதாகும். பிறகு, பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.