வேலூர், ஜூலை 5 - வீட்டுமனைப் பட்டா, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.நதியா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை மாவட்டச் செயலாளர் சி.எஸ்.மகாலிங்கம் துவக்கி வைத்தார். தவிச மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், பொருளாளர் நரசிம்மன், விதொச மாவட்ட தலைவர் பி குணசேகரன் செ.ஏகலைவன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கே.வி.குப்பம் வட்டம் விக்கிரமாசி மேடு கிராம பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கி ஓராண்டுகளாகியும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு அளந்து கொடுக்க வேண்டும், மேலும் தமிழக அரசின் கீழ் வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்டித் தரக்கோரியும் மலைவாழ் மக்களுக்கு சாதி சான்று, நலவாரிய அட்டை, சாலை வசதி தெருவிளக்கு வசதி போன்றவற்றை செய்து வழங்க கோரியும், காட்பாடி வட்டம் மகிமண்டலம் பகுதியில் சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் முடிவில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் ஆகியோரை சந்தித்து மனுஅளித்தனர்.