districts

img

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஊர் பொதுமக்கள் 2ஆம் நாள் சாலை மறியல்

ராணிப்பேட்டை, நவ. 7 -  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பாரஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பூங்கொடி. இவரது கணவர் ராஜ்குமார். செவ்வாயன்று (நவ. 5) இரவு உடல் நலம் பாதிக்கப்பட்ட பூங்கொடியை அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு  ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் பெரியார் நகர் அருகில்  இவர்கள் சென்ற காரும் மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. இத னால் அந்த காரில் வந்த சாதி ஆதிக்க சக்திகளால் ராஜ்குமார் கடுமையாக  தாக்கப்பட்டார்.  ராஜ்குமார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரண மடைந்தார். ராஜ்குமாரின் இளைய மகன் செல்லமணி கை எலும்பு முறிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனைத் தொடர்ந்து பாரஞ்சி கிராம மக்கள், தங்கள் கிராமத்தினர் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத தாக்குதலுக்கும், ஒருவரை அடித்துக் கொன்று விட்ட கொடூரத்துக்கும் நீதி, நியாயம் வழங்கக் கோரியும் குற்றவாளிகளை கைது செய்ய வும் வலியுறுத்தியும் வியாழனன்று (நவ. 7) ராணிப்பேட்டையில் இரண்டாம் நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு நீதி கிடைக்கும் வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பபோவதாக பொதுமக்கள் தெரி வித்தனர். குற்றவாளிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உடனடி யாக கைது செய்ய வேண்டும் என பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். அது வரை ராஜ்குமார் உடல் பிரோத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாராஞ்சி கிளை செயலாளர் கொள்ளா புரி, அரக்கோணம் & நெமிலி தாலுகா குழு உறுப்பினர் பிரசாந்த், வாலிபர் சங்கம் கூடலூர் அப்பு, தமிழ்வாணன், சிபிஐ மாவட்ட செயலாளர் லதா, எல். மணி, விசிக முன்னாள் மாவட்ட செய லாளர். கௌதமன், பிஎஸ்பி செந்தில் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஊர் பொதுமக்களுடன் பங்கேற்றனர்.