districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தல்

வேலூர், ஆக. 24 -

       தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட பேரவை கூட்டம் காட்பாடி சாலையில் உள்ள வேலூர் மாவட்ட சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கு. தருமன் தலைமை தாங்கி னார். மாவட்ட துணைத் தலைவர் கு.ஜனார்த்தனன் சங்க கொடியேற்றி வைத்தார். மாவட்ட இணைச் செயலாளர் எம்.கே.ஜீவா வரவேற்றார்.

    மண்டலச் செயலாளர் என்.பிச்சு மணி துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் அ.தாமோதரன், பொருளாளர் மோகனவேல் வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தனர்.

    மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சி.ராஜேந்திரன் நிறைவு செய்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    மின்சார வாரியம் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும், திருத்தப்பட்ட தொழி லாளர் நல சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஓய்வூ தியர்கள் நலன்களை பாதுகாக்கும் வாரிய உத்தரவு எண் 2 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.