திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடப்பாளை யம் ஊராட்சியை தனி வரு வாய் கிராமமாக அறிவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் அமைச்சர் பொன்முடி பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த மாதம் 23ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதை ஏற்று கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.