ஜூலை 14 முதல் 25 வரை ஓசூர் ஹில்ஸ் ஹோட்டல் வளாகத்தில் ஓசூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், மாநகராட்சி ஆணையர் சினேகா, சாராட்சியர் சரண்யா, துணை ஆட்சியர் தாட்சாயணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.