செங்கல்பட்டு, நவ. 22- செங்கல்பட்டு சிஎஸ்ஐ அலிசன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலு வலர் கதிர்வேலு தலைமையில் நடை பெற்றது. போட்டி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் 11:20 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் காலதாம தமாக வந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை கொடிய சைத்து துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் வருகைக்கு முன் மாற்றுத்திறனாளி மாணவர்கள் போட்டிக்கு தயார் நிலையில் நிற்க வைத்து காத்திருக்க வைக்கப்பட்டனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போதுமான அளவு கழிப்பறை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை. இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாவட்ட விளையாட்டு அலு வலர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.