districts

img

பேருந்து சென்றுகொண்டிருக்கும்போதே நடத்துநர் மாரடைப்பால் உயிரிழப்பு

கடலூர், மே 16- புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியாக கரூருக்கு தினசரி காலையில் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் வியாழனன்று காலை புதுச்சேரியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தில் ஓட்டுநராக கோபால் என்பவரும், நடத்துநராக கரூர் மாவட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது48) என்பவரும் பணியில் இருந்தனர். இந்த பேருந்து காலை 9 மணியளவில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வந்த போது ஓட்டுநர் வழக்கம் போல், பயணிகள் யாராவது இறங்க வேண்டியுள்ளதா என நடத்துனரிடம் கேட்டுள்ளார். அப்போது நடத்துனர் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் கோபால், உடனே பேருந்தை கடலூர் அரசு மருத்துவமனைக்குள் ஓட்டி சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பன்னீர்செல்வம் இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் பன்னீர்செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த னர். தொடர்ந்து பேருந்தில்  வந்த பயணி கள் அனைவரும் மாற்று பேருந்தில்  தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

;