districts

img

கடலூர் மாவட்டத்தில் 21.49 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்

கடலூர், ஜன.6 - கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் புகைப்படத்து டன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 49 ஆயிரத்து 186 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை முதன்மை தேர்தல் அலுவலர் ஆகியோரது அறிவுரைப்படி சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடந்தது. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் , திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி புதிதாக பெயர் சேர்க்க 45 ஆயிரத்து 405 பேர் மனு அளித்தனர். அதில் 44 ஆயிரத்து 926 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 479 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெயர் நீக்க 14 ஆயிரத்து 560 மனுக்கள் வந்ததில், 14 ஆயிரத்து 108 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 452 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. திருத்தம், இடமாற்றம் தொடர்பாக 20 ஆயிரத்து 240 மனுக்கள் வந்ததில், 19 ஆயிரத்து 383 மனுக்கள் ஏற்கப்பட்டன. 857 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறந்த 3469 பேர், இடம் பெயர்ந்த 10,263 பேர், இரட்டைப்பதிவு 376 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 108 வாக்கா ளர்கள் நீக்கப்பட்டனர். பெண் வாக்காளர்கள் அதிகம் இதன்படி கடலூர் மாவட்டத்திற்குட் பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 21 லட்சத்து 80 ஆயிரத்து 4 வாக்கா ளர்கள் உள்ளனர். இதில் 10 லட்சத்து 69 ஆயிரத்து 935 ஆண் வாக்கா ளர்கள், 11 லட்சத்து 9 ஆயிரத்து 744 பெண் வாக்காளர்கள், 325 இதர வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அடையாள அட்டை இதுகுறித்து ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 19 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்க ளுக்கும் வாக்காளர் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என்றும், 18-19 வயதிற்குட்பட்ட புதிய வாக்காளர்களுக்கு ‘தேசிய வாக்கா ளர் தினமான” வருகிற 25.1.2025 அன்று  மாவட்ட அளவிலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ள தேசிய வாக்காளர் தின விழாவின் போது வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்றார். மேலும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தமுறை நடைபெற உள்ளதால் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் வேலைநாட்களில் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச்  செயலாளர் கோ.மாதவன், அருள் ஜோதி (திமுக) திலகர் (காங்கிரஸ்), குளோப்(சிபிஐ),  மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அபிநயா கலந்து கொண்டனர்.