districts

img

மதுபான ஆலையில் 4 மாதம் சம்பளம் வழங்கவில்லை!

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்பட்டு வரும் மிடாஸ் கோல்டன் மதுபான ஆலையில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை கூட பின்பற்றாமல் தொழிலாளரை சுரண்டியதை கண்டித்தும், சிஐடியு தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் படப்பை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. சிஐடியு காஞ்சி மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர் துணைத் தலைவர் பி.ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.