districts

img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டாச்சிபுரம் மணம்பூண்டியில் வட்டத் தலைவர் ஏ.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.அர்ஜூனன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.