சென்னை, டிச. 7 - மத்திய சென்னையில் 98வது வட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் காரணமாக வெள்ளம் முழுமையாக வடிந்துள்ளது என்று சிபிஎம் கவுன்சிலர் ஏ.பிரியதர்ஷினி தெரிவித்தார். மிக்ஜம் புயல் மழையால் சென்னை மாநகரம் வரலாறு காணாத பாதிப்புகளை எதிர்கொண்டது. இதில் வில்லிவாக்கத்திற்கு உட்பட்ட 98வது வட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடும் மழைபெய்த போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய் பணிகள் போன்ற வற்றால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. களத்திலிருந்து கவுன்சிலர் ஏ.பிரியதர்ஷினி, உணவின்றி தவித்த கே.கே.நகர், அம்பேத்கர் நகர், புது நகர், திருவள்ளுவர் நகர் லாக்மா நகர், குட்டியப்பன் தெரு, திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு உடனுக்குடன் உணவு களை வழங்க ஏற்பாடு செய்தார். தரங்கப்பட்டு தெரு, பழனியப்பா தெரு அதனை சுற்றியுள்ள பகுதி களில் குடியிருப்புகளுக்குள் தேங்காமல் வெள்ளத்தை வெளி யேற்றினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்ட மன்ற உறுப்பினர் ஆ.வெற்றியழகன் உதவியோடு மின்சார இணைப்பு விரைந்து வழங்கவும், சாலைகளில் தேங்கிய நீரை முனைப்போடு செயல்பட்டு, அதிகாரிகளை முடுக்கிவிட்டு வெளியேற்றினார். தற்போது, சில பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக் கடை அடைப்புகளை சரிசெய்யும் பணியில் மும்முரமாக ஈடு பட்டுள்ளார். இந்த பணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வில்லிவாக்கம் பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.மதிழயகன், பகுதிக்குழு உறுப்பினர் வி.டில்லிபாபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் மணிகண்டன், நிர்வாகிகள் டேவிட், பிரேம், அருட்செல்வன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.