தொழிற்சங்க உரிமைக்காக போராடி வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஜெ.ராஜா, மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.