தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் பட்டம் வாங்க வந்த மாணவரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான அரவிந்தசாமியை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் ராஜேஸ்வரி வேதாசனம் அரசு கலைக்கல்லூரி மாணவர் கிளைச் செயலாளர் சத்யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டச் செயலாளர் மு.தமிழ் பாரதி, கிளைத் தலைவர் சாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.