தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று (செப். 26) ஊரக வளர்ச்சி முகமை மூலம் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.