சிதம்பரம், மே 30- சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் பள்ளியின் சார்பாக கோடைக் கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா பள்ளியின் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் அருள்மொழிச்செல்வன் முன்னிலை வகித்தார். ஸ்வேதா குமார் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்த முகாமில் கைப்பந்து, இறகு பந்து, கூடைப்பந்து, கபடி சிலம்பம் ஆகியவற்றில் சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன் மற்றும் பயிற்றுனர்களாக செயல்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழக உடற்பயிற்சி கல்வி முதுகலை மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.