சென்னை, செப். 1 - தமுஎகச சைதை பகுதி நிர்வாகி சுபாஷ் (எ) ஆரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சைதாப்பேட்டை சைதை பகுதி பொருளாளர் அன்னமேரி ஆகியோரின் தாயார் எஸ்.சரோஜா ஞாயிற்றுக்கிழமை (செப்.1) காலமானார். அவருக்கு வயது 79. சைதை பன்னீர்செல்வம் நகர், திரிவீதியம்மன் தெருவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் டி.சுந்தர், ச.லெனின், பகுதிச் செயலாளர் வெங்கடேஷ், வட்டச் செயலாளர் வேலு,மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. செயற்குழு உறுப்பினர் கி.அன்பரசன், மாவட்ட தலைவர் சி.எம்.குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னாரது உடல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.