சென்னை, ஆக.13- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணை யத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். தற்போது, தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் பிரபாகர், 2028 ஜனவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார். டிஎன்பிஎஸ்சி தலை வராக இருந்த பாலச் சந்திரன், 2022 ஜூனில் ஓய்வு பெற்றார். அதன்பின், உறுப்பினராக இருந்த முனியநாதன், பொறுப்புத் தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புதிய தலைவர் நிய மிக்கப்படவில்லை. இதற்கு முன்னதாக டிஎன்பிஎஸ்சி, தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதை ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசீலிக்காமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.