சென்னை,அக்.5- இந்திய - இலங்கையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்களிப் பில் செயற்கைக் கோள் தயாரிப்பதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது. இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களி டம் விண்வெளி ஆய்வுத் திறன்களை வளர்ப்பதற்கு இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்எல் ஐஐடி) முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தலைமையி லான செயற்கைக் கோள் தயாரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பு டன் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எஸ்எல்ஐ ஐடி நிறுவனம் சென்னையில் கையெழுத்திட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்எல்ஐஐடி நிறுவனத்தின் தலைவர் இண்டி பத்ம நாதன், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப் பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இலங்கையில் மாணவர்கள் பங்களிப் பில் மேற்கொள்ளப்படும் முதல் விண்வெளி ஆய்வுத் திட்டம் இது வாகும். இதன் வாயிலாக யாழ்ப் பாணத் தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர் களும், இந்திய மாணவர்களும் கூட்டாக சேர்ந்து செயற்கைக் கோளை வடிவமைக்க உள்ளனர். இந்த செயற்கைக் கோள் வளி மண்டல ஆய்வு, தகவல் தொடர்பு பயன் பாட்டுக்கு உதவிகரமாக இருக்கும். இது இஸ்ரோ மூலம் அடுத்தாண்டு விண்ணில் நிலைநிறுத்தப்படும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனர் ஸ்ரீமதி கேசன் கூறினார். தொடர்ந்து இண்டி பத்மநாதன் கூறும்போது, “இந்த முயற்சி விஞ்ஞான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கண்டுப் பிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இரு நாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கும். இரு நாடுகளின் மாண வர்கள் செயற்கைக் கோள் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள உதவும். இரு கட்டங்களாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்பு செயற்கைக் கோள் தயாரிப்பு பணிகள் மேற்கொள் ளப்படும். யாழ்ப்பாண மாணவர்கள் உலக அளவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப் பட்டுள்ளது” என்றார்.