districts

img

பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள்

திருவள்ளூர், ஆக.29- பொன்னேரி அருகே பன்னீர் வாக்கத்தில் வசித்து வரும் வேட்டைக்காரன் இனத்தை சேர்ந்த 22 குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆற்காடு ஊராட்சிக்குட்பட்ட அது  பன்னீர் வாக்கம் கிராமம். இந்த கிராமத்தில்  நத்தம் புறம்போக்கு நிலத்தில் வேட்டைக் காரன் இனத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.  பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2024, பிப்ரவரியில் 56 குடும்பங்களுக்கு பட்டா  வழங்கப்பட்டது. அதையும் கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. கொடுத்த 9 பட்டாக்களில் பயனாளர்களின் பெயர்களில் எழுத்து பிழைகள் ஏற்பட்டுள்ளது.  மேலும், விடுபட்ட 24 குடும்பங்களுக்கு மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு பட்டாக்கள் வழங்குவதாக பொன்னேரி வட்டாட்சியர் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை,  பட்டாவில் பயனாளிகளின் பெயர்களில் உள்ள பிழைகளையும் திருத்தம் செய்யவில்லை.  விடுபட்டவர்களுக்கு பட்டாக்களை வழங்கவில்லை. நகரத்தை சுற்றி உள்ள கட்டிடங்கள், அனுமதியில்லாத திறந்த வெளிப்பரப்பு (பெல்ட் ஏரியா) என்று பட்டா  கொடுப்பதை அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்ற னர்.  பட்டா இல்லாமல் பாதிக்கும் மக்கள் 10 முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி வரும் செப்.3 அன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்த னர்.  இதை தொடர்ந்து ஆக.29 அன்று  பொன்னேரி வட்டாட்சியர் பேச்சுவார்த் தைக்கு அழைத்தார். இந்த கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வழக்கம் போல அதிகாரி கள் காலம் கடத்துவதால் திட்டமிட்டபடி செப். 3 அன்று போராட்டம் நடைபெறும் என தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் இ.கங்காதுரை, மாவட்டச் செயலாளர் ஜி.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் ஜி.கணேசன், வி.சர வணன், என்.வெங்கடம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.