சென்னை, ஏப். 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பி.சி.வரதராஜன் (75) திங்கட்கிழமை (ஏப்.17) அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், பள்ளவள்ளி கிராமத்தில் உடல்நலக்குறைவால் கால மானார். இவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வடசென்னை மாவட்ட புறநகர் செயலாளராகவும், தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் முன்னணி நிர்வாகியாகவும், சிபிஎம் செங்குன்றம் மாதவரம் பகுதிக்குழுச் செயலாளராகவும் திறம்பட செயல்பட்டார். ஏராளமான இளைஞர்களை வாலிபர் சங்கத்திற்கும், கட்சிக்கும் கொண்டு வந்தார். அவரது உடலுக்கு மாத வரம் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், ஆ.தமிழ் செல்வி (ஜனநாயக மாதர் சங்கம்), பகுதிக்குழு உறுப்பினர் வா.சரவணன், கட்டுமான சங்க வட சென்னை மாவட்டச் செயலா ளர் பி.லூர்துசாமி, மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் செயலாளர் ந.ஞானகுரு, வா.கண்ணன், கோ.மதன், சரவணன் (மதிமுக) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அதே பகுதியில் உள்ள இடு காட்டில் திங்களன்று (ஏப். 17) மாலை அடக்கம் செய் யப்பட்டது.