districts

img

போலியான தயாரிப்புகள் பறிமுதல்

சென்னை.அக்.16- பிரபல நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட சாப் கட்டர் பிளேடுகளை அறிவுச்சொத்துரிமை பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். டாடா நிறுவனத்தின் பெயரில் போலியாக இப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நாமக்கல் கோட்டை பிரதான சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள வளர்பிறை ஏஜென்சியில் சோதனையிட்டபோது இந்த பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டது. இதுகுறித்து அறிவுச்சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையின் ஆய்வாளர் என்.கெஜலட்சுமி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.