ஆவடி காவல் ஆணையரக பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை
அம்பத்தூர், செப். 14- ஆவடி காவல் ஆணையரகம் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் காவல் துறை யினர் சோதனை மேற்கொண்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் ரவுடிகளின் அட்டகாசத்தை அடியோடு ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முதல் நடவடிக்கையாக ஆவடி காவல் ஆணையரகம் பகுதியில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் ரவுடிகளின் பட்டியல் எடுக்கப்பட்டது. அந்த பட்டியலில் கொலை, கொள்ளை முயற்சி, கொலை முயற்சி, கூலிப்படையினர், வழிப்பறி, கஞ்சா விற்பவர்கள், போதைப் பொருள் கடத்தல், விற்பனை செய்பவர்கள் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த மாதம் 250 ரவுடி கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆவடி காவல் ஆணை யர் கி.சங்கர் தலைமையில் காவல் துறை யினர் தனித்தனி குழுக்களாகச் சென்று ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரவுடிகளின் வீடுகளில் யார்? யார்? தங்கி உள்ளனர். வீடுகளில் கத்தி , அரிவாள், வெடிகுண்டு, போன்ற பயங்கர ஆயுதங்கள் உள்ளதா என சோதனை செய்தனர். மேலும் ரவுடிகளின் மனைவி பிள்ளை களிடம் உள்ள செல்போனையும் சோதனை செய்தனர். அவர்கள் யார் யாருடன் செல்போனில் பேசி உள்ளார்கள் என்று விவரங்களையும் சேகரித்துள்ளனர். இந்த சோதனையில் பட்டா கத்தி அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி உள்ளனர். ரவுடிகளின் வீடுகளில் தங்கி இருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சென்னையில் 94 பேருக்கு டெங்கு காய்ச்சல்
சென்னை, செப். 14- தமிழ்நாட்டில் கடந்த 13 நாட்களில் மட்டும் 204 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 94 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். சென்னை நந்தனத்தில் செய்தி யாளர்களை சந்தித்த அவர், கொசு உற்பத்தியாகும் வகையில் பராமரிப்பின்றி உள்ள கட்டிட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சென்னை மாநகரில் 2 ஆயிரத்து 665 வணிக ரீதியான கட்டிடங்கள் மற்றும் 3 ஆயிரத்து 387 புதிய கட்டுமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் ராதா கிருஷ்ணன் கூறினார். பருவ நிலை மாற்றம் காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 13 நாட்களில் மட்டும் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்தில் டெங்கு தொற்றுக்கு உள்ளா னோர் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனில்வந்த அழைப்பால் ஸ்கூட்டரில் இருந்த பெட்ரோல் எரிந்தது
சென்னை,செப்,14- சென்னை, வியாசர்பாடி, சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகள் ரோகிணி (வயது25). மதுரவாயலில் உள்ள பிரபல எண்ணை நிறுவனத்தில் ஏரியா விநியோகஸ்தராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது ஒரு கேனில் பெட்ரோல் வாங்கி அதனை ஒரு பையில் போட்டு மோட்டர் சைக்கிளின் முன் பகுதியில் தொங்க விட்டு இருந்தார். அதே பையில் தனது செல்போனையும் போட்டு இருந்தார். கோயம்பேடு காமராஜர் சாலை, லட்சுமி நகர் முதல் தெருவில் வந்தபோது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் இருந்து பெட்ரோல் கேன் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று உடல் பருமனாக இருந்த ரோகிணியால் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. இதனால் அவர் தீயில் சிக்கி உடல் கருகினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரோகினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல் கேனுடன் செல் போனை சேர்த்து வைத்திருந்தபோது செல்போனுக்கு அழைப்பு வந்ததால் கசிந்து இருந்த பெட்ரோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறக்கும் ரயில் சேவை: அரசு கையகப்படுத்த திட்டம்
சென்னை, செப்.14- சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையை கைய கப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை ஒருங்கிணைந்த போக்கு வரத்து குழுமம் கோரி யுள்ளது. ரயில் இயக்கம் முதல் அனைத்து சேவை களையும் கையகப்படுத்து வது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை தயாரிக்க வும் முடிவு செய்யப்பட்டுள் ளது. பறக்கும் ரெயில் நிலை யங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலை யங்கள் போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கி ணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள் ளது.
காஞ்சிபுரம் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரம், செப். 14- காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யுள்ளதாவது:- காஞ்சிபுரம், பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இந்த 12 மாத பயிற்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். வரும் 22 ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100-யை அரசுடமையாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் செலுத்திவிட்டு அதற்கான செலானை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து செலுத்தலாம்.பதி வேற்றம் செய்யப்பட்ட செலான் நகல் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதில் சுய கையொப்பமிட்ட பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலை யத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் அல்லது கொரியர் மூலம் மட்டுமே 22.9.2023 தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நேரில் அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்: மக்களை பாதுகாக்க சிபிஎம் கோரிக்கை
புதுச்சேரி, செப்.14- டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத மாநிலம். குப்பைகள் இல்லாத தூய்மையான நகரம் என ஆட்சியர்கள் வாய்ப்பந்தல் போடுகிறார்கள். தற்போதும் பல இடங்களில் குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் நகரமாகவே புதுச்சேரி இன்றும் தொடர்கிறது. ஆட்சியாளர்களின் பேச்சுக்களை நம்பி மக்கள் ஏமாறா மல் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. ஆனால் கழிவுகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் இருந்து கொடிய நோய் பரப்பும் கொசுக்கள் பெருகி மக்கள் மத்தியில் நோய் பாதிப்பை உருவாக்குகிறது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக சளி, இருமல், காய்ச்சல், உடலில் ரத்த அணுக்கள் குறைவது கண்கள் சிவப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் ஒரே நாளில் இரண்டு இளம் பெண்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. டெங்கு நோயால் மேலும் மக்கள் பாதிப்பதற்கு முன்பே, போர்க்கால நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சுகாதாரம், உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை கள் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பதற்கான மருந்து தெளிப்பது உள்ளிட்ட மேற்படி மூன்று துறைகளும் உள்ளூர் மட்ட அளவில் மக்களோடு இணைந்து தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். நோய் தொற்று கண்ட றியப்பட்ட பகுதிகளில் அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் பாதிப்பால் உயிரிழந்த இரண்டு இளம் பெண்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், உயிர் காக்கும் தரமான மருந்துகள் இருப்பில் வைக்கவும் அரசு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
கடலூர் சிறையில் ரவுடி தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சி
கடலூர், செப்.14- சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் கடலூர் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது அறையில் சிறை அதிகாரி மணிகண்டன் சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை எண்ணூர் தனசேகரன் தாக்க முயன்றார். மேலும் மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் பாட்டில்களை வீசி கொலை முயற்சி நடந்தது. இந்த வழக்கிலும் எண்ணூர் தனசேகரனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எண்ணூர் தன சேகரன் அறையை சிறைக்காவலர்கள் சோதனை செய்த போது செல்போனை பறிமுதல் செய்தனர். இதை யடுத்து அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு எண்ணூர் தனசேகரன் தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இதனால் தனசேகரனை சிறைக்காவ லர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த 7 ஆம் தேதி தனசேகரன் மீது உள்ள வழக்கு சம்பந்த மாக சென்னை பொன்னேரி நீதிமன்றத்தில் காவல்துறையி னரால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மாலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அப்போது சிறைக்காவலர் கள் எண்ணூர் தனசேகரன் அறையை மீண்டும் சோதனை செய்தனர். அப்போது, செல்போன் மறைத்து வைத்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறைக்காவலர்கள் அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் வியாழனன்று (செப்.14) எண்ணூர் தனசேகரன் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரைகளை தின்று விட்டதாக சிறை காவலர்களிடம் தெரிவித்தார்.
கோரிக்கைகளை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம்: ரிஷிவந்தியம் எம்எல்ஏ தகவல்
கள்ளக்குறிச்சி, செப். 14- கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 114 கிராம ஊராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் உள்ளது. இந்தத் தொகுதியில் உள்ள பொது மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகள் மற்றும் அடிப்படை கோரிக்கை நேரில் சந்தித்து மனுக்களாகவும், தகவல்களாகவும் தெரிவிக்க நேரம் மற்றும் பொருட்செலவை குறைக்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே மின்சாரம், குடிநீர், தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை 6381666396 தொலைபேசி எண்ணில் வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்துடன் அனுப்பி னால் பரிசீலனை செய்யப்பட்டு நிறை வேற்றப்படும் என்று வசந்தம் கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.