districts

சலவை கூடங்களை மேம்படுத்த திட்டம்

சென்னை,மே 4 -

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவது தொடர்பாகவும், புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை , சேத்துப்பட்டு ஆகிய  2 சலவைக் கூடங்களை தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்து வது தொடர்பாக  அமைச்சர் சேகர்பாபு  மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் . இப்பணிகள் 3 மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றார். அதேபோன்று, பிராட்வே,  பி.ஆர்.என். கார்டனில் அமைந்துள்ள 146 குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருக் கின்றன. மக்களின் பாதுகாப்புக் கருதி, இக்குடியிருப்பு மக்களை வேறு பகுதிக்கு மாற்றம் செய்து  புதிய குடியிருப்புகள் கட்டித்தரப் படும் என்றும் அவர் கூறினார்.