districts

img

பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் சரிதா தலைமையில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தியும், பெண்களை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஆர்கே நகர் பகுதி தலைவர் சரிதா தலைமையில் தண்டையார்பேட்டையில் வெள்ளியன்று (ஜூலை 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, பொருளாளர் பிரவீனா, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.