ராணிப்பேட்டை,ஜூலை 5 -
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க புதிதாக சங்கம் அமைத்துள்ளனர்.
சோளிங்கர் நகராட்சியில் 25 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்கள் உரிமை களை மீட்டெடுப்பதற்காக உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தில் இணைந்து புதிய சங்கத்தை துவக்கினர்.
சங்க அமைப்பு குழு கூட்டத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டச்செயலாளர் எபிஎம். சீனிவாசன் தலைமை வகித்தார். வேலூர் மாவட்டத் தலைவர் எம். காசி உள்ளிட்ட சங்க நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
தலைவராக பி.ரகு, செய லாளராக டி.சூரியமூர்த்தி, பொரு ளாளராக எம். ஏழுமலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர்.