கிருஷ்ணகிரி, பிப்.5 – தளி ஒன்றியத்தில் பட்டியலின மக்களின், வாழ்வாதார அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க வேண்டும்,இல்லை என்றால் தளி ஒன்றியத்தை ஸ்தம்பிக்கச்செய்யும் மாபெரும் காத்திருப்பு போராட்டம் விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் கூறினார். தமிழ்நாடு கர்நாடகா மாநில எல்லை யில் மலைகள்,வனங்கள் நடுவில் உள்ளது தளி ஊராட்சி ஒன்றியம். தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட அஞ்செட்டி வட்டம் உள்ளிட்ட 56 ஊராட்சிகள் நிறைந்த,மிகப் பெரும் பரப்பிலான,தமிழகத்திலேயே பெரிய ஒன்றியமான தளி சட்டமன்ற தொகுதி யாகவும் உள்ளது. இங்குள்ள 95 விழுக்காடு மிகச்சிறு மலை கிராமங்களில் மலை வாழ், பழங்குடி, இருளர்,தலித், அருந்ததியர், பிற்படுத்தப்பட்ட மக்களே அதிகம் உள்ளனர்.80 விழுக்காடு கிராமங்களுக்கு குறிப்பாக பட்டியலின மக்களுக்கு சுடுகாடு,குடியிருப்புகளுக்கு பட்டா, சாலை,மின்சாரம், குடிநீர்,சுகாதாரம், கழிப்பிட வசதி கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் உள்ளன.
இரவு நேரங்களிலும் பிரசவ வலி ஏற்படுகின்ற தாய்மார்களையும், நோய் வாய் படுபவர்களையும் தூளியில் கட்டி சுமந்து கொண்டு 10 கிலோமீட்டர் வரை இருளிலும், யானை தாக்குதல் அச்சுறுத்தலின் நடுவே,ஒற்றையடி பாதையில் மலை சரிவில் கைவிளக்கு வெளிச்சத்தில் மலையை கடந்து வந்து சேர வேண்டிய அவல நிலை இன்னும் தொடர்கிறது. இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் செவ்வாயன்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் பேரணியும்,தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. சங்கத்தலைவர் புருஷோத்தம ரெட்டி தலைமையில் மூத்த தலைவர் டி.எஸ்.பாண்டியன்,பொருளாளர் அனுமப்பா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மூத்த தலைவர் பி.நாகராஜ்ரெட்டி துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சாமி நடராஜன், துணை செய லாளர் பி.டில்லிபாபு ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர்.மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் பேசுகையில்,புறம்போக்கு நிலத்தில் அதிலேயே வாழ்ந்து இறக்கும் போதும் சுடுகாடு கூட இல்லாமல் ஓடை, ஏரி,
குட்டை பகுதிகளில் புதைக்கும் அவல நிலை இன்றும் தொடருகிறது.அடிப்படை சுகாதார வசதிகள் வீடுகளுக்கு பட்டாக்கள், குடி இருக்க வீட்டுமனைகள் இல்லா மல் வாழ்வாதாரம் இழந்து இந்த மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு உடனடியாக அடிப்படை சுகா தார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், பட்டியலின மக்களின் அடிப்படை கோரிக்கைகள் உடனடி யாக தீர்க்கப்பட வேண்டும். இது குறித்து அரசு செவிசாய்க்காத பட்சத்தில் தளி ஒன்றியத்தை ஸ்தம்பிக்க வைக்கும் மாபெரும் காத்திருப்பு போராட்டத்தை விவசாயி கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் கூறினார். கோரிக்கை மனுவை நேரடியாக மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலு வலர் பாபுசிவனப்பள்ளி,பி.பி.பாளை யம் பகுதிக்கு உடனடியாக கழிவு நீர் கால்வாய் அமைத்து தரவும் குடிநீர் வசதிகளை சீர்படுத்திட வும் உறுதி அளித்தார்.பிற கோரிக்கை கள் குறித்து மாவட்ட ஆட்சிய ருக்கும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கும் வலியுறுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதிஅளித்தார். மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ் தலைவர் முருகேஷ்,பொருளாளர் எம்எம்.ராஜு,ஒன்றிய தலைவர் சிவப்பா,முன்னாள் மாவட்ட செய லாளர் ஆர்.சேகர் ஒன்றிய செயலாளர் நடராஜன் கலந்து கொண்டனர்.