districts

img

கண்டாச்சிபுரம் வட்டச் செயலாளராக எஸ்.கணபதி தேர்வு

கண்டாச்சிபுரம்,டிச.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டாச்சிபுரம் வட்ட 14 ஆவது மாநாடு அரகண்டநல்லூரில் சனிக்கிழ மையன்று (டிச 4) நடை பெற்றது. மாநாட்டிற்கு வி.உமா மகேஸ்வரி பி.முருகன் ஏ.வி.கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர், மாநாட்டு கொடியை ஆர்.சண்முகசுந்தரம் ஏற்றிவைத்தார், வட்டக் குழு உறுப்பினர் எம் பழனி  அஞ்சலி தீர்மானம் வாசித்தார், முன்னதாக அரகண்டநல்லூர் நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணன்  வரவேற்றார்.   கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  வி.ராதாகிருஷ்ணன், எஸ்.வேல்மாறன்,எஸ்.கீதா,  மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்,   12 பேர் கொண்ட வட்டக் குழுவிற்கு செயலாள ராக எஸ்.கணபதி தேர்வு செய்யப்பட்டார். முடிவில் ஏ.ஏழுமலை நன்றி கூறினார். கண்டாச்சிபுரம் வட்டத்தில் தீயணைப்பு, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து வட்ட அலுவலகங்கள் உடனடியாக கொண்டு வரவேண்டும், அரசு கலைக்கல்லூரி தொடங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;