புதுச்சேரி,ஜன.24- புதுச்சேரி அரசு மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 7,195 மாணவர்க ளுக்கு 2024-25 கல்வியாண்டிற்கு உதவித் தொகையாக ரூ.40 கோடியே 71 லட்சத்து, 98 ஆயிரத்து, 756 கல்வி உதவி நிதியை முதலமைச்சர் ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்த தொகை அந்தந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வங்கிக் கணக்கில் துறையின் சார்பில் நேரடியாக செலுத்தப்படுகிறது. முதல்வர் அறிவுறுத்தல் தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே நேரடியாக செலுத்து வதால், தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங் கள் கல்விக் கட்டணத்தைச் செலுத்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர் களை கட்டாயப்படுத்த கூடாது என்று முதல்வர் ரங்கசாமி தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்கு நர் இளங்கோவன் உடனிருந்தார்.