ஏழை, எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி மாதம்தோறும் மின் கணக்கீடு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிக பகுதிக் குழு, கொளத்தூர் பகுதிக்குழுக்கள் இணைந்து செம்பியம் மின்வாரிய அலுவலகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச்செயலாளர்கள் எஸ்.செல்வராஜ், பா.ஹேமாவதி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.