ஆர்.கே. நகரில் 110 குடும்பங்களுக்கு பட்டா
சென்னை, ஜூலை 16- தமிழ்நாடு அரசு பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் இணைந்து விற்பனை பத்திரம் வாங்கியவர்களுக்கு பட்டா வழங்கும் சிறப்பு முகாம் ஆர்.கே. நகரில் நடைபெற்றது.
இதில் நேரு நகரைச் சேர்ந்த 110 பேருக்கும், எழில் நகரைச் சேர்ந்த 6 பேருக்கும் முதல்கட்டமாக சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் பட்டா வழங்கினார். அப்போது பேசிய 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, என்ஓசி, விற்பனை பத்திரம் இல்லாதவர்களுக்கும் பட்டா வழங்க அந்தந்த பகுதியில் முகாம்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
இதில் 4ஆவது மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு கணேசன், திமுக பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், சிபிஎம் பகுதி செயலாளர் வெ.ரவிக்குமார், நிர்வாகிகள் சசி, விஜய் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆவடி அரசு பள்ளியில் ரூ.1.86 கோடியில் சீரமைப்பு பணிகள்
எம்எல்ஏ நாசர் அடிக்கல்
அம்பத்தூர், ஜூலை 16- ஆவடி மாநகராட்சி உட்பட்ட 21ஆவது வார்டில் உள்ள அண்ணா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியை புனரமைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் சார்பில் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளியை புனரமைத்து, கூடுதல் வகுப்பறைகள், சமையலறை, உணவருந்தும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.1.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகளை செய்ய சமீபத்தில் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த பணிகளை மேற்கொள்ள ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் மேயர் கு.உதயகுமார், மண்டலக் குழு தலைவர் ஜோதிலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் வீரபாண்டியன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போதை பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்திடுக
வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 16 - இளைஞர்களை, மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தீவிர நட வடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர் சங்கத்தின் ஆர்.கே. நகர் பகுதி மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே. நகர் பகுதி பேரவைக் கூட்டம் தலைவர் டி.பி.ராஜா தலை மையில் தோழர் நல்லுசாமி நினைவகத்தில் நடைபெற்றது. பேரவையை மாவட்டத் தலைவர் ஜி.நித்யராஜ் துவக்கி வைத்தார்.
துணை செயலாளர் ஐஸ்வர்யா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். செயலாளர் விஜய் வேலை அறிக்கை யையும், பொருளாளர் எம்.எஸ்.ஷாஜகான் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செய லாளர் எல்.பி.சரவணத்தமிழன் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர் நா.விஜயகுமார் வரவேற்றார். பாட்சா நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
ரேசன் கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மாதாமாதம் அனைத்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், கொருக்குப் பேட்டை, ஐ.ஓ.சி. பகுதி களில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி தினசரி மருத்துவர் வருகையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக கோபி, செயலாளராக விஜயகுமார், பொருளாளராக ராஜா உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.