districts

img

நெருக்கடியில் தவிக்கும் நெல் விவசாயிகள்

திருவண்ணாமலை, ஜுலை 4- திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் சாலை ஏந்தல், பள்ளி கொண்டாப்பட்டு பகுதியில்,  நம்மாழ்வார் விவசாய சந்தையில்  ஜெய் கணேஷ்  என்பவர் 200க்கும் மேற்பட்ட  விவசாயிகளிடம் சுமார் 5 கோடி ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை விவசாயிகளுக்கு தராமல்  ஏமாற்றி மோசடி செய்துள் ளார். ஏமாற்றப்பட்ட விவசாயி கள் கடந்த  ஜுன் 27 ஆம்  தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்,  பின்னர் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சி யர், அரசு நெல் கொள்முதல்  நிலையம்  இருக்கும் போது,  நீங்கள் தனியார்  நிறுவனத்தில் நெல்லை விற்பனை செய்து ஏமாறக் கூடாது என்று விவசாயி களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் ஜூலை 3 ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்த  கருந்துவாம்பாடி மற்றும் சீலப்பந்தல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிலர், தாங்கள்  சாகுபடி செய்த நெல்  மூட்டைகளை கருந்து வாம்பாடி கிராமத்தில் செயல்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் கடந்த மாதம் 3 ஆம் தேதி விற்பனை செய்ததாக வும், இதுவரை அந்த நெல்லுக்கு உண்டான பணம் தங்களுக்கு வர வில்லை எனவும் குற்றம் சாட்டி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.