districts

img

அழகின் அடையாளமாக மாறும் ரெட்டேரி ...

 கொளத்தூர் அருகே  ஒரு காலத் தில் புறக்கணிக்கப்பட்ட நீர் நிலையாக  இருந்த  ரெட்டேரி மிக விரைவில் சூழுல்  சுற்றுலாத்தலமாக மாற உள்ளது. தற்போது இந்த ஏரியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி கள் அடுத்த ஆண்டு மே மாதத்திற் குள் முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ திட்ட மிட்டுள்ளது. இந்த ஏரியில் பூங்காக் கள்,நடைப்பயிற்சி நடைபாதைகள், மூன்று தீவுதிட்டுகள், படகு சவாரி உள்ளிட்ட பல வசதிகள் வரவுள்ளன.                               சென்னையைச் சுற்றியுள்ள பல ஏரி கள் மோசமான நிலையில் உள்ள ரெட்டேரி புனரமைப்பு பணிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த சிஐடியு தலை வர் அ.சவுந்தரராசன் சட்டப்பேரவை யில் ரெட்டேரியை அழகுபடுத்தி படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் சுற்றுலா தளம் ஆக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி உள்ளார். அந்த கோரிக்கை பல ஆண்டுகளுக் குப் பிறகு தற்போது தான் நிறை வடைய உள்ளது. ரெட்டேரி மட்டு மல்ல சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பாக்கம், பெருங்குடி, வேளச் சேரி, மற்றும் புழல் ஏரிகளும் புனர மைக்கப்பட உள்ளது. இதற்காக விரி வான வடிவமைப்புகள் மேற்கொள்ள ப்பட்டு ஏரியை அழகுப்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளன.     கொளத் தூர், செங்குன்றம் வழியில் உள்ள ரெட்டேரி 3.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி ரூ.10 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரு கிறது. இந்த ஏரியில் நீர் கொள்ள ளவை 35 மில்லியன் கன அடியில் இருந்து 45 மில்லியன் கன அடி யாக உயர்த்தும் வகையில் நீர்வள ஆதாரத்துறையால் தூர்வாரப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அந்த பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தி உள்ளது. ஏரியை தூர் வாரும்போது கிடைத்த மண்ணை கொண்டு ஏரியின் மையப்பகுதியிலும் வேறு இரண்டு பகுதியிலும் 200மீ x 200மீ அளவில் சிறிய தீவு திட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு மரங்களும் புட்களும் நடப்பட்டுள் ளன. ஏரியை வெளியில் இருந்து வெளி ப்படையாக பார்க்கும் வகையிலும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகை யிலும் சுற்றுச்சுவர்  கட்டப்படவுள்ளது. பொதுமக்கள் உதவியுடன் இந்த ஏரியை இயற்கை சூழலுடன் பாது காக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று சென்னை பெருநரை வளர்ச்சி குழு மத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித் தார். இந்த ஏரி குறித்த பல்வேறு தரவு களும் வரலாறும் ஏரியை புனர மைப்பதில் சந்தித்த சவால்களும் பல கைகளில் குறிப்பாக எழுதி வைக்கப் பட உள்ளன.  ஏரியை மீட்டெடுக்கும் பணியில்  சென்னை பெருநகர வளர்ச்சி குழு மத்துடன் இணைந்து ஈடுபட்டுள்ள ஆல்கான் என்ற தனியார் நிறு வனத்தின் இணை நிறுவனர் ஹர்ஷிதா இதுகுறித்து கூறுகையில், விரைவில் ரெட்டேரி இந்தப் பகுதியின் அழகான  அடையாளமாக மாறும் என்று கூறினார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் அருகில் உள்ள பொது மக்கள் பயனடையும் வகையிலும் ஏரியை அழகுப்படுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று அதிகாரி கள் தெரிவித்தனர். ஏரி அழகு படுத்த ப்பட்ட பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வலசை வரும் என்றும் அவர்கள் கூறினர். கருங்கற்களால் ஆன நுழைவாயில், சிற்பங்கள் தீவுகளை மரத்தால் ஆன பாலங்களைக் கொண்டு இணைத்தல் செயற்கை இழை புட்களால் விளையாட்டுப் பகுதி, உடற்பயிற்சிக்கு தனியிடம், நூலகம் உள்ளிட்டவையும் இங்கு அமைய உள்ளன.