districts

img

என்எல்சியில் ஓய்வு பெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, பிப்,6- என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களிடம் இருந்து கூடுதலாக 6 நாள் ஊதியத்தை அபராதமாக பிடித்தம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில், அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட 6 நாள் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால் என்எல்சி நிர்வாகம் இதுவரைக்கும் வழங்கவில்லை. இதையடுத்து,  6- நாள் சம்பளம் இழந்த நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டிசம்பர் 27 அன்று என்எல்சி ஆர்ச் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, கையெழுத்து இயக்கம் நடத்தி என்எல்சி அதிபர் அலுவலகத்தில் வியாழக்கிழமை(பிப்.6) ஒப்படைக்கப்பட்டது.